Wednesday 1st of May 2024 10:07:01 PM GMT

LANGUAGE - TAMIL
.
எம்.ரி. நியூ டயமண்ட் கப்பல் கப்டனுக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு!

எம்.ரி. நியூ டயமண்ட் கப்பல் கப்டனுக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு!


அம்பாறை சங்கமன்கண்டி கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த போது இரண்டு முறை தீவிபத்துக்கு உள்ளான எம்.ரி. நியூ டயமண்ட் கப்பலின் தலைமை மாலுமியை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எம்.ரி. நியூ டயமண்ட் கப்பலின் தலைமை மாலுமியை எதிர்வரும் செப்டெம்பர் 28 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எம்.ரி. நியூ டயமண்ட் கப்பலின் தலைமை மாலுமியை சந்தேக நபராக பெயரிடுவதற்கும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சட்டச் சார்பான முன்னறிவிப்பபை - பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் தப்புள டி.சி. லிவேரா குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பான தகவலை சட்டமா அதிபரின் இணைப்பாளரான சட்டத்தரணி நிஷாரா ஜயரட்ண தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டு இலக்கம் 35 இன் கீழான சமுத்திர மாசடைவதை தடுக்கும் சட்டத்தின் 25, 26, 38 மற்றும் 53 போன்ற சரத்துக்களின் கீழ் தண்டனை பெறக்கூடிய குற்றங்கள் தொடர்பில் போதுமான விடயங்கள் குறித்து நியாயமான சந்தேகம் முன்னிலைப் படுத்தப்பட்டிருப்பது சட்டமா அதிபரின் நிலைப்பாடாகும்.

இது குறித்து சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளமை குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை இடுமாறும் அறிவுறுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE